திமுக தொண்டர்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்தான் துணை முதலமைச்சர் - ஈ.ஆர்.ஈஸ்வரன்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்: திமுகவின் 75ம் ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் தொடக்கி நடந்து வருகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மேலும், திமுகவின் 75ம் ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக பவளவிழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியதாவது, "ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் திமுக செயல்படும்.

இட ஒதுக்கீடு என்பது திமுக கொண்டு வந்தது என்பதை மறக்கக் கூடாது. முதலமைச்சர் பதவிக்கு போட்டி கிடையாது, துணை முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டி.

யார் முதலமைச்சர் என்றால் திமுகவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்றாலும் திமுகவைச் சேர்ந்தவர் வர வேண்டும்.

இதற்கு டி.என்.பி.எஸ் போல் தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க முடியாது, பெரும்பான்மையாக இருக்கும் திமுக தான் முதலமைச்சர் பொறுப்பை வகிக்க வேண்டும்.

திமுக தொண்டர்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்தான் துணை முதலமைச்சர்" என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram DMK75


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->