இரட்டை இலை சின்னம்: இபிஎஸ்-க்கு ஆப்பு வைத்த ஓபிஎஸ்! அதிரவைக்கும் பதில் மனு! - Seithipunal
Seithipunal



இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட மனு குறித்து, தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

மேலும், இது குறித்து அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டவர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன்படி, ஏற்கனவே இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்து தெரிந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அதில், "ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள்வமூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், அதனை பொதுக்குழுவின் ஒரு  சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது! 

தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் கிடையாது, எனவே தற்போதைய அ.தி.மு.க கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS OPS Election Comminission Irattai Ilai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->