என்ன இப்படி சொல்லிட்டாரு!!! அண்ணாமலைக்கு ஒண்ணுமே தெரியல...! கட்சிக்கு விசுவாசமாக இருந்த அவர், தமிழ்நாட்டுக்கு...? - டிகே சிவகுமார்
Annamalai doesnt know anything He was loyal to the party but Tamil Nadu DK Sivakumar
நேற்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.




அப்போது செய்தியாளர்கள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையில் கருப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
அண்ணாமலை:
இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
டி.கே.சிவகுமார்:
இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.இது தற்போது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
English Summary
Annamalai doesnt know anything He was loyal to the party but Tamil Nadu DK Sivakumar