நீங்கள் கொடுத்தால் 'புரட்சி'.. பிரதமர் கொடுத்தால் "அடக்குமுறையா..'? - அண்ணாமலை கடும் தாக்கு..!!
Annamalai Speaks About DMK MP Su Venkatesan Speech in Parliament
தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம். பி. சு. வெங்கடேசன் நேற்று பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். அப்போது அவர் பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பது குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
அதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,"திமுக எம். பி. வெங்கடேசன் தான் மதுரை மேயருக்கு அவர் பதவியேற்கும் போது அவர் கையில் செங்கோலைக் கொடுத்தார். அப்படியானால் வெங்கடேசன் மதுரை மேயரை அடிமைப் படுத்தி உள்ளாரா?
![](https://img.seithipunal.com/media/j3.6.1-upmha.png)
நீங்கள் செங்கோல் கொடுத்தால் அதை புரட்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்கள் பிரதமர் அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்திருந்தால் மட்டும் அது அடிமைத் தனம், பழைமை வாதம் என்று ஆகி விடுமா? ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம் என்று திமுக தெரிவித்துக் கொண்டே இன்னொரு பக்கம் உருதுப் பள்ளிகளை திறக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தான் இவர்களது மாநில கல்விக் கொள்கை இருக்கிறது. சு. வெங்கடேசன் திமுக நம்மை கைவிட்டு விடுமோ என்ற அச்சத்தில் தான் கண்டதையும் பாராளுமன்றத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்.
மேலும் திமுகவில் எப்படி கொத்தடிமைகளாக நிறைய பேர் உள்ளனரோ அதே போல் காங்கிரசில் சில கொத்தடிமைகள் இருப்பதை மறுக்க முடியாது. இந்துக்கள் பற்றி பேச ராகுல் காந்திக்கு என்ன பாரம்பரியம், தகுதி இருக்கிறது?" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai Speaks About DMK MP Su Venkatesan Speech in Parliament