யார் அந்த சார்? சட்டப்பேரவையில் விவாதம் கோரும் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், "சார்" என்று யாரையோ தொலைபேசியில் பேசும் போது குறிப்பிட்டதாக தெரிவித்தது, இதற்க்கு பின்னல் பெரும் புள்ளி யாரோ இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

மேலும், அதிமுக, பாமக,பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் "யார் அந்த சார்?" என்று கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  "சார்" என்று யாரும் இல்லை, மாணவி விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது என ஆளும் கட்சியான திமுக தரப்பில் பதில் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சட்டமன்றபேரவைத்தலைவருக்கு எடப்பாடி கே. பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், "சென்னைஅண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்தும், தொடர்ந்து நியாயமான விசாரணை நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தியும், இக்குற்றத்தில்சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது குறித்தும் பேரவைவிதி 56-ன் கீழ் பேரவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து இன்றே விவாதிக்க கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AU Case TN Assembly ADMK EPS


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->