திமுக போராட்டம்! டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த மீனவர்களின் வருமானத்தை தான் அவர்களது குடும்பத்தினர் நம்பி உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை, சிறையில் இருந்து விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தின் இன்று திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai Letter to Central Minister Fisherman issue DMK Protest delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->