பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம் .. அரசுக்கு எச்சரிக்கை விடுத்த - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை பாஜக விரும்பவில்லை. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்ந்து நீடித்தால், தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கோவையில் நாளை பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும். சட்டம் - ஒழுங்கு சீர்குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம். காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன்.

பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை பாஜக விரும்பவில்லை. முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும். பாஜக - திமுக இடையே நடைபெறும் போரில் காவல்துறை வரக்கூடாது என கூறியுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய பாஜக எம்.எல்.ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai warning to tn govt for petrol Bomb issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->