கடலூர் மாவட்ட பாஜகவில் உட்கட்சி பூசல்..!! சாதி பெயர் சொல்லி தாக்கியதால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தை அடுத்த சிதம்பரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பாஜக பிரச்சார அணி தலைவரை பாஜகவினர் சாதி பெயர் சொல்லி தாக்கிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கடலூர் மாவட்ட பாஜக தலைவர் கோபிநாத் கணேசனுக்கும் மாவட்ட பிரச்சார ஆணி தலைவர் பிரதாப் இடையே கட்சி விவகாரத்தில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் பாஜக பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த பிரதாப் மீது கோபிநாத் கணேசன் ஆதரவாளர்கள் சாதி பெயர் சொல்லி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதுகுறித்து பேசிய பாரத் "கோபிநாத் கணேசன் என்பவர் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரை அழைத்து வந்து காவல்துறையினர் முன்னிலையில் என்னிடம் இருந்த செல்போனை பறித்து நெஞ்சில் தாக்கினார். மேலும் சாதி பெயரை சொல்லி கொச்சையாக பேசியதோடு எனது முகத்தில் கொடூரமாக தாக்கினர். 

எனது சொந்த ஊருக்கே வந்து வெட்டுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்" என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் பாரத் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காவல்துறையினர் முன்னிலையில் பாஜக பிரமுகர்கள் சாதி பெயரை சொல்லி தாக்கிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் பாஜக நிர்வாகி சூர்யா சிவா பெண் நிர்வாகி ஒருவரை சாதி அடிப்படையில் கொச்சைப்படுத்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் தற்போது சிதம்பரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழக பாஜகவில் மாவட்ட நிர்வாகிகளிடையே சாதிய அரசியல் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp volunteers attack on BJP executive by caste name


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->