சாதிவாரி கணக்கெடுப்பை நடத்ததும் அதிகாரம் யாரிடம் உள்ளது? சட்டப்பேரவையை தெறிக்கவிட்ட பாமக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பத்தி லைத்திருந்தது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி இராமதாஸ், மத்திய அரசிடம் இருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. மத்திய அரசின் சட்டமும் தெளிவாக உள்ளது. சமூக நீதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை திமுக அரசால் இனியும் ஏமாற்ற முடியாது. எனவே, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்ததும் அதிகாரம் யாரிடம் உள்ளது? என்பது குறித்து  விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் பின்வருமாறு:

பா.ம.க. ஜி. கே. மணி:

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதிக்கான அங்கம்.
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
மாநில அரசு நடத்த முடியாது, மத்திய அரசு செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறுகிறது.
தமிழக அரசு உண்மையில் நடத்தியதா?

அமைச்சர் மெய்யநாதன்:

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க. நாயினார் நாகேந்திரன்:

மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது.
மத்திய அரசே இதை முடிவெடுக்க வேண்டும்.

அமைச்சர் சிவசங்கர்:

மத்திய அரசு தோழந்து மாநிலத்தின் அதிகாரங்களை குறைத்து வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு செய்ய வேண்டும், அதனை அவர்களே செய்ய வேண்டும்.

பா.ம.க. ஜி. கே. மணி:

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்றால், மாநில அரசே ஏன் தீர்மானம் நிறைவேற்றியது?
மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caste Census Tamilnadu Assembly PMK MLA GK Mani


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->