கோவை மேயர் முதல் நாள்.. முதல் கையெழுத்து.. பொதுமக்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


கோவை மேயராக இன்று கல்பனா ஆனந்த்குமார் பதவியேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று வார்டு கவுன்சிலர் பதவி ஏற்ற நிலையில், இன்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மேயராக கல்பனா ஆனந்த் குமார் வெற்றி பெற்று பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் கோவை மாநகர மேயராக பதவி ஏற்ற கல்பனா ஆனந்த் குமார் போட்ட முதல் கையெழுத்தில் கழிப்பறைகள் இல்லாத மாநகராட்சி பள்ளிகளில் உடனடியாக கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவருடைய இந்த முதல் கையெழுத்து பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore mayor 1st signature public Praise


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->