சூப்பர் ப்பா!!! 50% இட ஒதுக்கீடு என்ற போலி தடையை காங்கிரஸ் உடைத்தெறியும்..!!! - ராகுல் காந்தி
Congress will break false barrier 50 percentage reservation Rahul Gandhi
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான 'ராகுல் காந்தி', பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மக்கள் முன்னிலையில் உரையாடினார்.

அப்போது ராகுல் காந்தி உரைத்ததாவது,"மகா கூட்டணி பீகாரில் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடும்.பீகார் மக்கள் எப்போதும் நாட்டிற்கான புதியை திசையை காட்டியுள்ளனர்.
இந்த முறையும் அதேபோன்று புதிய திசையை சட்டசபை தேர்தலின்போது காட்டுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.சமூகத்தில் பின்தங்கியவர்கள் 2 ம் தர குடிமக்கள் போன்று நடத்தப்படுகிறார்கள்.
இடஒதுக்கீட்டில் 50 % என்ற போலி தடையை காங்கிரஸ் உடைத்தெறியும்.காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் நடத்தப்பட்ட சாதி கணக்கெடுப்பைப் போன்ற சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சி மாதிரியை மாற்றும்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Congress will break false barrier 50 percentage reservation Rahul Gandhi