திமுக அரசுக்கு குட்டு வைத்த கூட்டணி கட்சி! அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதிலடி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்பட்ட அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? என்று, திமுக அரசை அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், "ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்பட்ட அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தில் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டியது ஏன்?

ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்க்கான அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்து விடுவதினால் கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா? எனவே இப்படியான போக்கை காவல்துறை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கேபாலகிருஷ்ணன் வலியுறுத்தி பேசியிருந்தார். 

கே பாலகிருஷ்ணனின் இந்த பேச்சு ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இது குறித்து இந்த செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவோம்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIM DMK Sekarbabu K Balakrishnan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->