போதும்... போதும்...!!!திமுக அரசு போலீசாரை விட்டு மிரட்டுகிறது! எங்கும் ஊழல்!!! எதிலும் ஊழல்!!!- அண்ணாமலை
DMK government is threatening to leave the police Corruption everywhere Corruption in everything Annamalai
தமிழக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது தி.மு.க வைப்பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது," திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் தி.மு.க அரசு தெரிவித்தது.

ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தொடர்ந்து செய்திகளில் கண்டு வருகிறோம்.
இந்நிலையில், கோவிலுக்குள் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளின் அவல நிலையைக் காணொளியாக வெளியிட்ட தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதீப்ராஜன் வீட்டிற்கு, அதிகாலை 4 மணிக்குக் காவலர்களை அனுப்பி மிரட்டியிருக்கிறது.
தி.மு.க., அரசு.எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது,காவலர்களையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது.
தி.மு.க., அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.தமிழகத்தில் வரும் 2026 ம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி" எனப் பதிவிட்டுள்ளார்.
English Summary
DMK government is threatening to leave the police Corruption everywhere Corruption in everything Annamalai