சகித்துக் கொள்ள முடியவில்லை! அவர்கள் தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா? - திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா காட்டம்! - Seithipunal
Seithipunal


இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டு வருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா? அவர்கள் எல்லாருமே குஜராத், ராஜஸ்தான், ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு ரத்தம் கொதிக்கிறது.

ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள். இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ? இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!

இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க மத்திய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

அடிப்படை மனித உரிமைகள்கூட அவர்களுக்கு கிடையாதா!? ஒரு கண்டனம்... கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அதுகூடவா முடியாது?" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister TRB Raja Condemn to USA Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->