3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை! சிக்கினாரா திமுக அமைச்சரின் சகோதரர்!
ED Raid minister kn nehru brother DMK
அமைச்சர் கே.என். நேருவின் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருச்சி, சென்னை, கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 13 இடங்களில் கடந்த 3 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருச்சியில் அமைச்சர் நேருவின் வீடு, சென்னையில் மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரனின் வீடு, கோவையில் மற்றொரு தம்பி மணி வண்ணனின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு காரணம், நேருவின் குடும்பத்தினர் நடத்தும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம் மற்றும் டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் நிறுவனங்களில் பரிசோதனை செய்யப்பட்ட கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றங்கள் நடைபெறுவதாக எழுந்த புகார்களே ஆகும்.
2018-ம் ஆண்டு வருமான வரித் துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக கொண்டு, தற்போது இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று மாலை 4 மணிக்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டிலிருந்து அவரை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை, நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் 4 மணி நேரம் விசாரித்து பின்னர் வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் சென்றது.
இன்று மூன்றாவது நாளாகும் நிலையில், அவரிடம் தொடர்ந்து சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவர் அளித்த பதில்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
ED Raid minister kn nehru brother DMK