ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்! வழக்கை வாபஸ் பெற்ற தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் 6 முதல் 8 வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

இதில் முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இந்த சோதனை சட்ட விரோதமானது என அறிவிக்கவும், டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடவடிக்கைக்கு எதிராக, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கைத் தொடர்ந்த அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில், தமிழக அரசு அதற்கான பதிலுக்கு கால அவகாசம் கோரியது. மேலும், சோதனை சம்பந்தமான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அல்லது வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்தது.

முதலில் இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் முடிவடைந்த பின்னரே, தேவையெனில் மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசு கோர, அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ED Raid TASMAC TN Govt Supreme Court


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->