'பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை; பாஜக-வினர் எதை பார்த்து பயப்படுகின்றனர் என தெரியவில்லை'; ராகுல்குற்றச்சாட்டு..!
I do not know what the BJP is afraid of Rahul accusation
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளா தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனக்கு பேச அனுமதி வழங்கவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன், தன்னை பற்றி ஆதாரமற்ற ஒன்றை சபாநாயகர் குறிப்பிட்டுவிட்டு அதன் பிறகு தனக்கு பேச வாய்ப்பு அளிக்காமலேயே லோக்சபாவை ஒத்தி வைக்கிறார் என்றும், பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று ராகுல் காந்திகுற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் பேசியபோது , என்னைப் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அவர்கள் எதை பார்த்து பயப்படுகின்றனர் என தெரியவில்லை. என்று ராகுல் கூறியுள்ளார்.
English Summary
I do not know what the BJP is afraid of Rahul accusation