குடிபோதையில் ரகளை! தள்ளிவிட்ட இளைஞர் மீது கொலை வழக்கு! - Seithipunal
Seithipunal


கோவை ரயில் நிலையம் அருகே குடிபோதையில் ரகளை செய்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி சாலையில், 30 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் டீக்கடைக்கு வெளியே பிரச்னை செய்துள்ளார். 

அப்போது, அந்த டீக்கடையில் பணிபுரிந்த அன்வர் உசேன் (வயது 22) என்பவர் குடிபோதையில் இருந்தவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 

வாக்குவாதம் சண்டையாக மாறியதைத் தொடர்ந்து, அன்வர் குடிபோதையில் இருந்தவரை கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் தலையில் காயமடைந்து பலியானார்.

இதுதொடர்பாக புளியங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சமயந்தி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதன் அடிப்படையில், காவல்துறையினர் அன்வரை கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovai drunk man death case Crime


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->