72 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட குமரி அனந்தனின் உடல்..!
Kumari Ananthan body cremated with state honours amid 72 gunshots
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. டி.எஸ்.பி தலைமையில் 24 காவலர்கள் 07 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வடபழனி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை, யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்து. இதனால், சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் இன்று உயிரிழந்தார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
English Summary
Kumari Ananthan body cremated with state honours amid 72 gunshots