பள்ளிக்கல்வித்துறையில் 47,000 பணியிடங்கள், நிரந்தர  பணியிடங்களாக மாற்றம் - தமிழக அரசு அரசாணை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உட்பட மொத்தம் 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தின் மூலம், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் பெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்த சுமார் 47,000 பணியிடங்கள் தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, துறையின் செயல்பாட்டையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டத்தில், பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 14ம் தேி தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம், பிப்ரவரி 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Government School Education Department Permanent posts


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->