டிஎஸ்பி-யான இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா! குவியும் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


தீப்தி சர்மா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக பல ஆட்டங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். 

குறிப்பாக இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2023 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வெல்ல தீப்தி முக்கிய காரணமாக அமைத்திருந்தார்.

இப்படி இந்திய அணிக்காக தீப்தி சர்மா செய்த சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு, 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்து இருந்தது.

அதன்படி இன்று துணை போலீஸ் சூப்பிரண்டாகே (டிஎஸ்பி) சீருடை அணிந்து பதவியற்றுக்கொண்டுள்ளார் தீப்தி சர்மா.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தனக்கு பெருமையாக உள்ளதாகவும், இதற்காக உத்தரபிரதேச அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தீப்தி ஷர்மா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DSP Indian woman cricketer Deepthi Sharma


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->