12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. தேர்வுத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 8ம்தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 47,934 பேர் ஒரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். ஒரு சில பேர் மூன்று பாடங்களிலும், இன்னும் சிலர் இரண்டு பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் துணைத் தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடக்கக்கூடிய இந்த துணை தேர்வின் முடிவுகள், ஜூலை மாதமே வெளியிடப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வை எழுத மே 12ம் தேதி முதல் விண்ணப்பிக்க இன்றுடன் முடிவடைந்த நிலையில் மே 23ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th supplementry exam apply date extended


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->