மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை.! 2 பேருக்கு 20 ஆண்டு சிறை...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் மூலிபட்டி பகுதியை சேர்ந்தவர் டெய்லர் பாண்டி(43). இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பரான லாரி ஓட்டுநர் கணேசன் (36) என்பவரும் சேர்ந்து, மனவளர்ச்சி குன்றிய 13 வயது சிறுமிக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், கணேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 people jailed for 20 years for sexually harassing a mentally retarded girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->