வடலூரில் கர்நாடகா பேருந்து மீது லாரி மோதி விபத்து - 20 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் கர்நாடக அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்களுடன் கர்நாடக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மீது வடக்கு 4 முனை சந்திப்பு அருகே சேலத்திலிருந்து வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது..

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகா பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 peoples injured for accident in vadalur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->