அதிகாலையில் அதிர்ச்சி - தமிழக மீனவர்கள் 33 பேர் கைது.!
33 tamilnadu fishermans arrested
தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாகவே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது.
அத்துடன் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
English Summary
33 tamilnadu fishermans arrested