இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி அருகே சென்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சீனிவாசன் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A government bus driver died after falling from a twowheeler in Thoothukudi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->