கொலையில் முடிந்த வாக்குவாதம்.. மது அருந்தும் போது நடந்த தகராற்றால் நிகழ்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


மதுகுடித்த போது தகராற்றால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஓரிக்கை அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணன். கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள மதுபானகடையில்மது அருந்தி கொண்டிருந்த போது பாலு மற்றும் குமரன்  என்ற இருவரிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனை அடுத்து, சரணவனின் வீட்டிற்கு சென்ற இருவரும் அவரது தந்தையிடம் புகார் கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த சரணாவன் பாலு மற்றும் குமரன்  வீட்டிற்கு சென்று தகராற்றில் ஈடுப்பட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கட்டையால் சரவணனை பாலு தக்கினார். இதனால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் உடலை குட்டையில் வீசிசென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man Murder Near Near Kanjipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->