தஞ்சாவூர் || சித்தப்பா வீட்டிற்கு சென்றவர்.! மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்தப்பா வீட்டிற்கு சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி(46). இவர் மதுக்கூர் பகுதியில் இருக்கும் சித்தப்பா வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது மதுக்கூர் அருகே உள்ள கல்யாண ஓடை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அக்பர் அலியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அக்பர் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து அக்பர் அலியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person killed in motorcycle collision in Thanjavur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->