கள்ளக்காதலை கண்டித்த கணவர்... கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி...! தென்காசியில் பயங்கரம்...! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (56). இவரது மனைவி முத்து (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முத்துவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த கணேசன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் முத்து கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் முத்து, கணவர் கணேசனிடம் ஏன் வேலைக்கு சொல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு கணேசன், நீ கள்ளக்காதலை கைவிட்டால்தான் நான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்து, கொதிக்கும் எண்ணெய்யை கணவனின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதையடுத்து கணேசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி முத்துவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A wife arrested who pours boiling oil on her husband in thenkasi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->