ஒரே நாளில் இரண்டு கல்யாணம் செய்த கில்லாடி வாலிபன்...! அதிர்ச்சியில் காதலி!!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் கில்லாடி வாலிபர் ஒருவர் காலையில் ஒரு பெண்ணையும் மாலையில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்த சம்பவம்அப்பகுதியில் திகைக்க வைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்த்தால் காதலி கர்ப்பம் அடைந்தார்.இவர்  2 முறை கருகலைப்பு செய்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது பெற்றோர் அந்த வாலிபருக்கு திருமணம் பேசி உள்ளனர்.

இதை அறிந்த அவரின் காதலி வாலிபரிடம் கேட்டபோது உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியளித்துள்ளார்.அவ்வகையில் சம்பவத்தன்று, காலை தனது காதலியை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் மாலையில் தனது பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்துள்ளார்.இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது காதலி வாலிபரின் வீட்டுக்கு சென்றபோது அவரது குடும்பத்தினர் அவரை கடுமையாக பேசி வெளியேற்றிவிட்டனர்.

இது குறித்து காதலி அளித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரு பெண்களையும் ஏமாற்றிய வாலிபர் மீது கடுமையான தண்டனை தரும் வகையில் வழக்கு பதிவு செய்ய அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man who got married twice in one day His girlfriend shocked


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->