தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த அதிமுக! சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாக, தமிழக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்  சி.வி.சண்முகம் எம்.பி. புகார் அளித்தார்.

பின்னர் செய்தியர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பல்வேறு முறைகளை, அத்துமீறல்களை, காவல்துறையின் உடைய மெத்தனப் போக்கை, ஆளும் திமுக அரசுக்கு கைப்பாயாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மாவட்ட நிர்வாகம் குறித்த முறை கேடுகளை புகார் அளித்துள்ளோம்.

குறிப்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற வாக்காளர் பட்டியலில் இருக்கின்ற முறைகேடுகளை, மோசடிகளை புகாராக அளித்துள்ளோம்.

தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் படி விலாசத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் வாக்காளர் பெயர் மீண்டும் இடம் பெற்று இருக்கிறது என்று, புகார் பட்டியலை கொடுத்திருந்தோம். அதில் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்கள்" என்று சிவி ஷண்முகம் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK CV Shanmugam Erode Voters list issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->