தயாநிதிமாறன் ஏன் ஆஜராகவில்லை? அவதூறு வழக்கில் நறுக்குன்னு கேட்ட நீதிபதி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது, வழக்கு தொடர்ந்த தயாநிதிமாறன், ஏன் நீதிமன்றத்திற்கு இதுவரை வரவில்லை என்று, சென்னை சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு விலக்கு அளிக்க ஆட்சேபம் இல்லை என்று, தயாநிதி மாறன் தரப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வழக்கும், பின்னணியும்;

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொகுதி நிதியை தயாநிதிமாறன் சரியாக பயன்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.

இது உண்மைக்கு மாறான தகவல் என்றும், தன் மீது அவதூறு பரப்பும் வகையிலும், தனக்குள்ள நட்பெயரை கெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். 

இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தயாநிதி மாறன் ஏன் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தயாநிதி மாறன் தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதில், எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளிக்க தங்கள் தரப்புக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அப்போது நீதிபதி அவர்கள் நீதிபதி அவர்கள், தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞரை நோக்கி, ஏன் வழக்கின் மனுதாரர் ஆன தயாநிதி மாறன் நேரில் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், அடுத்த முறை கண்டிப்பாக தயாநிதி மாறன் நேரில் ஆஜர் ஆவார் என்று தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMK EPS Dayanidhi Maran case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->