சென்னையில் துணிவு vs வாரிசு கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அஜித் குமார் நடித்த துணிவு படத்தையும், விஜய் நடித்த வாரிசு படத்தையும் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அஜீத் ரசிகர்களுக்கான துணிவு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதேபோன்று விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திற்கான சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க சிந்தாதிரிப்பேட்டை அடுத்த ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் சென்றுள்ளார். அப்பொழுது பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டு இருந்த லாரியின் மீது ஏறி நடனமாடியுள்ளார். இதில் அவர் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith fan fall down and died in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->