வாயால் வடை சுடுவது, பொய் செய்திகளை பரப்புவதுதான் அண்ணாமலை வேலை - ஈ.பி.எஸ் காட்டம்! - Seithipunal
Seithipunal


கோவை : வாயால் வடை சுடும் அண்ணாமலை அரசியல் ஞானி போல் பேசுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக எதற்காக புறக்கணித்தது என்பதை ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் ஈரோடு இடைத்தேர்தலில் பரிசுகள், பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றது. வாயால் வடை சுடுவது, பொய் செய்திகளை பரப்புவது தான் அண்ணாமலையின் வழக்கம். 100 அறிவிப்புகளை 500 நாட்களில் வெளியிடுவோம் என கோவையில் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.

பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கோவைக்கு கொடுத்த வாக்குறுதியை அண்ணாமலை நிறைவேற்றுவாரா? அண்ணாமலை போன்ற தலைவர்களால்தான் மத்தியில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 3 வது, 4வது இடத்திற்கு வந்து விடும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். மிகப்பெரிய அரசியல் ஞானி போல் அண்ணாமலை பேசுகிறார் என எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai job is to go and spread the news EPS


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->