ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பழிக்கு பழி வாங்க திட்டம் - பாம் சரவணனை தேடும் சிபிசிஐடி! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது வரை 16 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபாலனின் மகன் வழக்கறிஞர் பிரபாகரன் என்பவரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளருமான தென்னரசுவின் அண்ணனான பாம் சரவணனையும் சிபிசிஇடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் பாம் சரவணன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பாம் சரவணன், அவரின் அண்ணன் உயிரிழந்த போது கூட வரவில்லை. இதன் காரணமாகவே போலீசார் அவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிட்டு வருவதாக தமிழக உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாம் சரவணனை போலீசார் தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong case bomb saravanan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->