தம்பியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பொடுவல்தறவிளை பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ரங்கதுரை (41). இவரது தம்பி தொழிலாளி பெனட் (33). இவர்களிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ரங்கநாதன், நேற்று முன்தின இரவு வீட்டு முன் நின்று கொண்டிருந்த பெனட்டை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்பு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெனட்டை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தம்பியை சரமாரியாக தாக்கிய அண்ணன் ரங்கதுரையை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Army soldier arrested for assaulting younger brother with iron rod in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->