சிவகங்கை : கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தை பலி.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை : கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தை பலி.!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகில் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி கலா. இவர்களுக்கு கிஷோர் கண்ணன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.

இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டின் முற்றத்தில் கிஷோர் கண்ணனும், கலாவும் சிறிது நேரம் அமர்ந்து விளையாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று  இரவும் இருவரும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு  பேசிக் கொண்டு இருந்தார். இவர்களது வீட்டு அருகிலேயே கிணறு ஒன்று உண்டு. 

ஆனால், அந்த கிணறுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இந்த நிலையில் கிஷோர் கண்ணன் வேகமாக கிணற்றை நோக்கிச் நின்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  தாய், கலா குழந்தையைப் பிடிப்பதற்காக ஓடியுள்ளார். ஆனால் அதற்குள் குழந்தை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது.

உடனே கலாவும் குழந்தையைக் காப்பாற்றும் நோக்கத்தில்கிணற்றுக்குள் குதித்தார். கலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து கணவர் கருப்பசாமிக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்ர். 

அந்த தகவலின் படி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் குதித்து கலாவையும், கிஷோர் கண்ணனையும் மீட்டனர். அப்போது கலா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஆனால் குழந்தை மட்டும் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

baby died drowned well in sivakangai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->