வேலூர் : பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


வேலூர் : பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!!

மத்திய அரசு ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி பகுதியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. 

இந்தப் பொதுக் கூட்டத்திற்காக கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. அந்தக் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். இதற்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு மாநகர் முழுவதும் மிகப்பெரிய பேனர், கொடி உள்ளிட்டவை வைத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

இந்தக் கூட்டத்தில், மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போது, மேடை அருகே வைக்கப்பட்டிருந்த பெரிய பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. பேனர் விழும் போது மக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

baner fell down causing amitsha speaking in vellore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->