நுகர்வோரிடம் கனிவாகப் நடந்து கொள்ள வேண்டும்..ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
Be kind to the consumer District Collector advises ration shop employees
உணவுப் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களிடம் எப்போதும் கனிவாகப் பேச வேண்டும் எனக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி அறிவுரை வழங்கினார்.
வேலூர்கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பணி நிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நியாய விலைக் கடையில் பணிபுரியும் 450 விற்பனையாளர்கள், கட்டுநர்களில் அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு வட்டாரங்களில் பணிபுரியும் சுமார் 238 விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கான (முதற்கட்டம்) பணி நிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மேலும், அணைக் கட்டு, குடியாத்தம், பேரணாம் பட்டு, கே.வி.குப்பம் வட்டாரங்களில் பணிபுரியும் விற்பனையாளர் களில் சிறப்பாகச் செயல்பட்ட விற்பனையாளர்களுக்கு வட்டாரத்துக்கு இருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி பரிசு வழங்கி பேசும்போது, " நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தற்போது கோடைக் காலம் என்பதால் அவர்களிடம் எப்போதும் கனிவாகப் பேசவேண்டும் என கூறினார்.
English Summary
Be kind to the consumer District Collector advises ration shop employees