தூத்துக்குடியில் சோகம் - பிரியாணி கடை உரிமையாளர் கழுத்தை நெரித்து கொலை.!
biriyani shop owner murder in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா. பிரியாணி கடை நடத்தி வரும் இவரும் முத்துக்கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் என்பவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் பரமசிவம் நண்பர் மோகன்ராஜுக்கு தள்ளு வண்டியில் பிரியாணி கடை வைத்துக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவர் மீதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.
நேற்று இருவரும் வீட்டில் யாரும் இல்லாததால் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், துண்டால் பரமசிவத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார். இதனால் பரமசிவம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கணவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அவரது மனைவி கதறி துடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பரமசிவன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
biriyani shop owner murder in thoothukudi