சதி செஞ்சுட்டாங்க - காங்கிரஸ் கட்சியின் புலம்பல்! எவ்வளவு அடிபட்டாலும், மிதிபட்டாலும் புத்தி வராதா? பாஜக தரப்பில் பதிலடி! - Seithipunal
Seithipunal


ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்/முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 9.30 மணி வரை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறி பாஜக ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது.

முன்னிலை நிலவரம் : காலை 11.10 மணி (மொத்த தொகுதிகள் : 90)

பாஜக கூட்டணி  - 47
இண்டி கூட்டணி -37
மற்றவை -4
INLD கூட்டணி -2

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதளப்பக்கத்தில், "கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜக பெரும் முன்னிலை.

காங்கிரஸ் கட்சிக்கு காலை 9 மணிக்கு சரியாக இருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள், ஒரு மணி நேரத்தில் 10 ம‌ணி‌க்கு தவறாகி விட்டது! வெற்றி பெற்றால் ஜனநாயகம்,  தோல்வியுற்றால் சதி! இதுவே காங்கிரஸ் கட்சியின் புலம்பல். எவ்வளவு அடிபட்டாலும்,  மிதிபட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கு புத்தி வராதா? என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Thirupathy Haryana Elelction 2024 Congress


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->