ஐய்யோ பாவம்!சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதல்...!!! 3 பேர் உயிரிழந்தனர்..!
car collided two wheeler trying cross road 3 people died
கடலூர் மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையான விழுப்புரம்-நாகை சாலையை இருசக்கர வாகனம் ஒன்று கடக்க முன்றயாது. அப்போது எதிர்பாராமல் இரு சக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள்.மேலும் இந்த விபத்தில் சரண்யா,நேரு, கல்பனா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உயிரிழந்தவர்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து காவலர்கள், வழக்கு பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
English Summary
car collided two wheeler trying cross road 3 people died