செங்கல்பட்டு அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த ராக்கெட் லாஞ்சர்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை உடைத்த போது, வெடித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

படுகாயம் அடைந்த அந்த நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூடு தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவத்தினர் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் ஏவும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் ராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர் ஏவும்போது, சில வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் அந்த பகுதிகள் கிடப்பதாக தெரிகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் இரும்பு, பித்தளை, அலுமினியம் போன்ற உலோகங்களுக்காக கைப்பற்றி, உடைத்து இரும்பு கடையில் விற்பனை செய்து வந்துள்ளனர். 

சம்பவம் நடந்த அன்று அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த கோதண்டம் என்பவர், வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்துச் சென்று, கத்தியால் அதனை உடைத்துள்ளார். இதில், ராக்கெட் லாஞ்சர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், கோதண்டம் பலத்த காயம் அடைந்தார். 

உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கு இடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், ராக்கெட் லாஞ்சர் போன்றவற்றை ராணுவத்திற்கு சொந்தமானது என்பதால், அதனை அதனை யாரேனும் எடுத்துச் சென்றால், தேசிய வெடி மருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Anumanthapuram Rocket Launcher blast


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->