செங்கல்பட்டு | மது அருந்திய கணவன்-மனைவி பலி!  கள்ளச்சாராயம் தான் காரணமா? போலீஸ் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே கள்ள சந்தையில் மதுவாங்கி குடித்த கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதிகள் உயிரிழக்க கள்ளச்சாராயம் தான் காரணமா? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே பேரம்பாக்கத்தில் மது அருந்திய வெண்ணியப்பன் - சந்திரா தம்பதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதால் தம்பதிகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் அவர்கள் அருந்தியது மதுவா? இல்லை கள்ளசாராயமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முன்னதாக மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் பலியாகிய சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 16க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தமிழக அரசு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chengalpattu perampakkam husband wife mystery death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->