செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி மாணவர்கள் இருவர் கடத்தல்?! பெரும் பரபரப்பு சம்பவம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் என்பவரின் 11 வயது மகள் மற்றும் 7 வயது மகன் கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஒழலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 11 வயதில் ஒரு மகள், ஏழு வயதில் ஒரு மகன் உள்ளனர்.

வேலனின் குழந்தைகள் இருவரும் ஒழலூர் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று மாலை பள்ளி முடிந்து இருவரும் வெளியே வரும்போது, காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இது குறித்து பள்ளியின் ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பள்ளிகள் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே வெளியான ஒரு தகவலின்படி, வேலவனுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக வேலவனின் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தைகள் கடத்தப்பட்ட பள்ளியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், காவல் கண்காணிப்பாளரின் அலுவலகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu school student kidnapping case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->