செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்: தாய் செய்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் செய்தியில், காவேரிபாக்கம் அருகே அந்த மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு அருகே பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த 11 வயது மாணவி மற்றும் 7 வயது மாணவன் கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், ஒழலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 11 வயதில் ஒரு மகள், ஏழு வயதில் ஒரு மகன் உள்ளனர்.

வேலனின் குழந்தைகள் இருவரும் ஒழலூர் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து இருவரும் வெளியே வரும்போது, காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இது குறித்து பள்ளியின் ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பள்ளிகள் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே வேலவனுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வருவதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதன் காரணமாக வேலவனின் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், தாய் ஆர்த்தி மற்றும் குழந்தைகள் இருவரையும் காவேரிப்பாக்கத்தில் மீட்ட போலீசாார், செங்கல்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்துவந்த நிலையில், தாய்  ஆர்த்தி மற்றொரு நபருடன் சேர்ந்து குழந்தைகளை அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu school student kidnapping case end


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->