ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதே போலீஸ் தான் - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து.! - Seithipunal
Seithipunal


கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற அத்வானி ரத யாத்​திரை​யின்​போது மதுரை திரு​மங்​கலம் அருகே ஆலம்​பட்டி தரைப் ​பாலத்​தில் பைப் வெடி குண்​டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013ம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலா​ளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்​கு​களில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன் கடந்த பத்து ஆண்டு​களுக்​கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறை​யில் உள்​ளார்.

இந்த நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவரது தாய் செய்யது மீரா அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற கோரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரவுடிகளுக்கு பாம் சரவணன், பாம்பு நாகராஜன் என்று எதற்கு பட்டப்பெயர்? போலீஸ் பக்ருதீன் தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

பாம் சரவணன், பாம்பு நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே அச்சமாக உள்ளது. ரவுடிகளுக்கு பட்டப்பெயர்களை வைப்பதால் சமூகத்தில் அவர்களுக்கான நற்பெயர் பாதிக்கப்படுகிறது. ரவுடிகளை பட்ட பெயர் வைத்து அழைப்பதே காவல்துறையினர் தான். ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai high court warning tn police for name to rowdy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->