மகாவிஷ்ணுவை கைது செய்யக்கூடாது! போர்க்கொடி தூக்கும் ஆதரவாளர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஜென்மத்தில் மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு மூட நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

இதனையடுத்து அவர் மீது சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் அளிக்கப்பட்டது. 

மேலும், அவரை அழைத்துவந்து பேச வைத்த ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த மகா விஷ்ணுவை, விமான நிலையத்திலிருந்து ரகசிய இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மகாவிஷ்ணுவின் கைதுக்கு அவரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 

குறிப்பாக, மகாவிஷ்ணுவின் பேச்சால் எனக்கு தெளிவு கிடைத்தது. அன்பு என்று கூறுபவர், மாற்றுத்திறனாளி குறித்து எப்படி தவறாக பேசுவார் என்றும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மகாவிஷ்ணுவின் நோக்கம் மகாவிஷ்ணுவின் ஆதரவாளர் அவருக்காக குரல் எழுப்பியுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai TNPolice arrest Mahavishnu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->