நாகையில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.!
chief minister mk stalin speech with nagai dmk excuetives
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நாகப்பட்டினம் சென்றார். அங்கு அவருக்கு திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதைத்தொடர்ந்து பால்பண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாலை நான்கு மணிக்கு நாகப்பட்டினம் தளபதி அறிவாலயத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை கட்சியினருக்கு வழங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சிக்கு சென்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.
English Summary
chief minister mk stalin speech with nagai dmk excuetives