தொடர் மழையால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
continuous rains increase water flow in panchalinga falls
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.
![](https://img.seithipunal.com/media/v v bvv.png)
இந்த நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மேலும், நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால், பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டி வருகிறது. மேலும், அருவியின் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக, இன்று பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
English Summary
continuous rains increase water flow in panchalinga falls